மாரண்டஅள்ளி குண்டு பள்ளம் சுடுகாடு அருகே சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 26 செப்டம்பர், 2023

மாரண்டஅள்ளி குண்டு பள்ளம் சுடுகாடு அருகே சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்றவர் கைது.


தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி சுற்று வட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக மாரண்டஅள்ளி போலீசாருக்கு இரகசிய  தகவல் கிடைத்தது, அதனை தொடர்ந்து போலீசார் இன்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சீரியம்பட்டி அருகே குண்டுபள்ளம் சுடுகாட்டில் மதுபானங்களை விற்பனை செய்வது  தெரிய வந்தது. அவரை  பிடித்து விசாரித்ததில் சரண்ராஜ்  (வயது. 29) என்பதும் அரசு மது பானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததும்  தெரிய வந்தது, அவரை கைது செய்த மாரண்டஅள்ளி போலீசார் அவரிடமிருந்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 180 மில்லி அளவுள்ள 30  குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

-->