Type Here to Get Search Results !

காலை உணவு திட்டத்தை விமர்சித்த தினமலர் நாளிதழை தடை செய்ய வேண்டும் - அரூரில் நாளிதழை தீயிட்டுக் கொளுத்தி திமுகவினர் ஆவேசம்!


முதல்வர் முக.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்  இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும்ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் விரிவுபடுத்தப்பட்டது. இந்த நிலையில் தினமலர் நாளிதழில் காலை உணவு திட்டத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து செய்தி வெளியானது. 

இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தினமலர் நாளிதழை தீட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக தருமபுரி  மாவட்டம் அரூரில் நகர செயலாளர் முல்லைரவி தலைமையில் பேரூராட்சி துணை தலைவர் சூர்யாதனபால் முன்னிலையில் கச்சேரிமேட்டில் அண்ணா சிலை முன்பு திமுகவினர் தினமலர் நாளிதழை எரித்தனர். அப்போது தினமலர் நாளிதழுக்கு எதிராக திமுகவினர்  முழக்கங்களை எழுப்பினர். 


தொடர்ந்து  மாணவர்களுக்காக தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி திட்டத்தை விமர்சித்து சர்ச்சைக்கு உரிய வகையில் செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை தடை செய்ய வேண்டும் எனவும், தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக செய்தி வெளியிடும் தினமலர் நாளிதழை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் தமிழழகன் கோட்டிஸ்வரன்  நா.முருகேசன் திருவேங்கடம் முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் சிட்டிபாபு நகர  நிர்வாகிகள் செல்வதயாளன் கணேசன் மோகன் மாதேஷ் ஆதம் ஜோதி சென்னகிருஷ்ணன் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies