தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம். அதிமுக நகர செயலாளர் ராஜா தலைமையில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு அதிமுகவின் முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கில் செந்தில், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பஸ் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
முன்னதாக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்.
இந நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் கணபதி, அதிமுகவின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் செந்தில், கவுன்சிலர் விமலன், முன்னாள் கவுன்சிலர்கள் கோவிந்தசாமி, ராஜா கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர்சுப்ரமணி, பாலகிருஷ்ணன், தகவல்தொழில்நுட்ப நிர்வாகிகள் அசோக், கிரிநாத் நந்தகுமார், புஷ்பாகரன், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.