தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் விரைவில் பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம் குறித்து வணிகர் சங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்கம், டிராவல்ஸ் உரிமையாளர்கள் சங்கம், ஜே.சி.பி.உரிமையாளர்கள் சங்கம், நடைபாதை வியாபாரிகள் சங்கம் ஆகிய சங்களுடன் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார். பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது, ஆலோசனையில் திரௌபதி அம்மன் கோவில் முன்பு தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கலாம் என்றும், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
எனவே தற்காலிக பேருந்து நிலையம் இடமாற்றம் செய்வது குறித்து பொதுமக்களுக்கு விரைவில் அறிவிக்கப்படும் என ஆலோசனை கூட்ட முடிவில் பேருராட்சி தலைவர் பி.கே.முரளி அவர்கள் தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வணிகர் சங்க தலைவர் முத்து, செயலாளர் சரவணன், பொருளாளர் மாணிக்கம், நகை கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, அரிமா சங்க தலைவர் சீனிவாசன், மொபைல் சங்க தலைவர் அருளானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக