தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது, ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் மற்றும் அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவர்.
தற்போது திரௌபதி அம்மன் கோவில் கட்டுமான பணிகள் நடைபெறுவதையொட்டி, உண்டியல் காணிக்கை என்னும் பணி கோயில் அறநிலைய செயல் அலுவலர் ரகுராஜன், அறங்காவலர் குழு நிர்வாகி பி.எல்.ஆர்.ரவி, தர்மகர்த்தா ஆகியோர் முன்னிலையில் நலநடைப்பெற்றது. உண்டியலில் 41, ஆயிரத்து 328 ரூபாய் காணிக்கை பணம் எண்ணப்பட்டு கருவூலத்தில் செலுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக