Type Here to Get Search Results !

ஆன்லைன் பணம் செலுத்தி ஏமாற்றம்; மீட்டு தரக்கோரி புகார் மனு.

 

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா மூங்கில் மடுவு பகுதியை சேர்ந்தவர் பொய்யாமொழி. இவர் நேற்று தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, நான் சென்னையில் திரைப்பட இயக்குனராக பணிபுரிந்து வருகிறேன். 



கடந்த மாதம் எனது நண்பர்கள் மூலம் டி அண்ட் ஜி என்ற பண முதலீடு செய்யும் ஆப் பற்றி தெரிந்து கொண்டேன். அந்த ஆப்பை டவுன்லோடு செய்து அதன்மூலம் முதலீடு செய்தேன். இந்த ஆப்பின் மூலம் செயின் லிங்க் போல எனக்கு தெரிந்தவர்களையும் இணைப்பதன் மூலம் 10 சதவீத கமிஷன் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறப்பட்டது. 



இதன்படி பலரை இந்நிறுவனத்தில் இணைத்ததோடு நானும் ரூபாய் 3 லட்சம் வரை முதலீடு செய்தேன். பின்னர் அந்த ஆப் செயலிழந்தது. எனவே நான் ஏமாற்றப்பட்டதோடு தர்மபுரி மாவட்டத்தில் பலரும் பல லட்சம் வரை ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே நான் இழந்த ரூபாய் மூன்று லட்சம் பணத்தை மாவட்ட காவல்துறை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 



இதேபோல பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த லோகேஸ்வரி, கோபிநாத், பாரதிதாஸ் ஆகியோரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884