Type Here to Get Search Results !

அரூர் காவல் நிலையத்தில் நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது விசிகவினர் மீது புகார்.


இஸ்லாமியர்களையும், கிருத்துவர்களையும் கொச்சைப்படுத்தி, தமிழகத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசிய  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் பாஷா தலைமையில் அரூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.


இதில்  மாவட்ட துணைச் செயலாளர் செல்லைசக்தி, மாநில துணைச்செயலாளர் காதர்பாஷா, மொரப்பூர் ஒன்றிய செயலாளர் திருலோகன், தொகுதி துணைச்செயலாளர் பெ.கேசவன், ஒன்றிய துணைச்செயலாளர் தீரன்தீர்த்தகிரி, நகர செயலாளர் சித்தார்த்தன், மாவட்ட துணை அமைப்பாளர் துரைவளவன், வேம்பை கண்ணதாசன், மொரப்பூர் ஒன்றியதுணை செயலாளர் ஜெய்பீம். குமார்வளவன், சாக்ரட்டிஸ் வீரமணி, ஏழுமலை ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies