நாங்குனேரி சம்பவத்தை கண்டித்து அரூரில் விசிகவினர் ஆர்ப்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 12 ஆகஸ்ட், 2023

நாங்குனேரி சம்பவத்தை கண்டித்து அரூரில் விசிகவினர் ஆர்ப்பாட்டம்.


நெல்லை மாவட்டம் நாங்குனேரியில்  சின்னதுரை என்ற பள்ளி மாணவன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி கிழக்கு மாவட்டம் சார்பில் அரூரில் மாவட்ட செயலாளர் சி.கே.சாக்கன்சர்மா தலைமையில் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கைது செய்தவர்களை பினையில் விடக்கூடாது அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோசங்கள் எழுப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் செல்லைசக்தி, ஒன்றிய செயலாளர் சோலை மா.ராமச்சந்திரன், இசுலாமிய பேரவை மாநில துணை செயலாளர் காதர்பாஷா, தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன்,  ஒன்றிய நிர்வாகிகள் ராமசாமி, வேடியப்பன், நகர நிர்வாகிகள் சித்தார்த்தன், இளையராஜா, கலையரசன், அகத்தியன், ஒன்றிய குழு உறுப்பினர் கோ.முருகன், சோலைஆனந்தன், ராகுல், வழக்கறிஞர் ரவிவர்மா, சாந்தலிங்கம், குமார்வளவன், மாது, செந்தில்வளவன், அழகரசன், மருதைகுப்புசாமி, நடராஜ், சக்திதாசன்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad