Type Here to Get Search Results !

தகடூர் புத்தகப் பேரவையின் சார்பில் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழா வரும் செப்டம்பர் 8-17 வரை தருமபுரி வள்ளலார் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும்..


தகடூர் புத்தகப் பேரவையின் சார்பில் ஐந்தாம் ஆண்டு புத்தகத் திருவிழாவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் 8 முதல் 17 வரை தருமபுரி வள்ளலார் மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெறும். இதற்கான ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட பொது நூலகத்தில் மாவட்ட நூலக அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தகடூர் புத்தக பேரவை செயலாளர் மரு.இரா. செந்தில் அவர்கள் புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து பேசினார். பின்வரும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.


புத்தகத் திருவிழா செய்திகளை பொதுமக்களிடமும்,  மாணவர்களிடமும் விரிவாகக் கொண்டு செல்வது. தகடூர் புத்தகப் பேரவை நண்பர்கள் துண்டு பிரசுரங்கள், வாட்ஸ் ஆப் போன்றவை மூலம் இதற்கான முன்னெடுப்புகளில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். செப்டம்பர் 5 ஆம் தேதி 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்வு நடைபெறும்.  மாவட்ட ஆட்சியர் அவர்கள் பங்கேற்க உள்ளார்.


தனியார் பள்ளி நிர்வாகங்கள் மற்றும் நிதி உதவி செய்ய வாய்ப்புள்ள புரவலர்களிடம் அருகில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், நூலகங்களுக்கும் புத்தகங்கள் அன்பளிப்பு தர உதவி கேட்பது என முடிவு செய்யப்பட்டது, பகலில் இலக்கிய நிகழ்வுகள், மாலை நேரத்தில் மாணவர் கலை நிகழ்ச்சிகள் வழக்கம் போல நடைபெறும். தகடூர் புத்தகப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இ.தங்கமணி  இவற்றை ஒருங்கிணைப்பார்.


பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறும். தமிழ்நாடு அறிவியல் இயக்கச் செயல்பாட்டாளர்களுடன் இணைந்து நூலகர் சரவணன் இதனை ஒருங்கிணைப்பார். அரங்குகள் அமைப்பு,  மாலை நேர சொற்பொழிவாளர்கள் ஏற்பாடு போன்ற பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன, புத்தகத் திருவிழாவை வெற்றிகரமாக்கிட அனைவரும் ஒத்துழைக்க அன்புடன் வேண்டுகிறோம் என தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884