மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் புன்னகை சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வெ.நாகராணி வெங்கடேசன், கிருஷ்ணகிரி, சாந்தி வெள்ளையன், (கே. ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர்), தீ.மதியழகன் (மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஓய்வு), ராஜசேகர் (மஞ்சமேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்) மற்றும் உதவி ஆசிரியர், சாந்தி (மக்கள் நல பணியாளர்), காமாட்சி (கொசு ஒழிப்பு பணியாளர்), டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பசுமை தேசம் இளைஞர் நற்பணி மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் நா.சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக