தருமபுரி மாவட்ட பால் வளத்துறை துணை பதிவாளர் கோவிந்தசாமியை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்பாட்டம். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 26 ஜூலை, 2023

தருமபுரி மாவட்ட பால் வளத்துறை துணை பதிவாளர் கோவிந்தசாமியை கண்டித்து பால் உற்பத்தியாளர்கள் ஆர்பாட்டம்.


தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகேவுள்ள பெரிய வத்தலாபுரம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்பு இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது,


பெரிய வெத்தலாபுரத்தில் பால் உற்பத்தியாளர்களின் முழு ஆதரவுடன், வெளிப்படை தன்மையாக சங்கம் நடந்து வரும் நிலையில் இந்த சங்கத்தின் செயல்பாடுகளை சீர்குலைக்கும் நோக்கத்திலும், முறைகேடாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு பெரிய வத்தலாபுரத்தில் மற்றொரு சங்கத்தினை துவக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும், தங்களது சங்கத்திற்குட்பட்ட விவகார எல்லைக்குள் சி்ன்ன வத்தலாபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் சந்திரா, உதவியாளர் பாஸ்கர், ஓய்வு பெற்ற செயலாளர் கந்தசாமி உள்ளிட்டோர் பெரிய வத்தலாபுரம் விவகார எல்லைக்குள் விதிகளை மீறி பால் கொள்முதல் செய்து வருவதாகவும், இது போன்று பால் கொள்முதல் செய்யக்கூடாது, அப்படி மீறி பால் கொள்முதல் செய்தால் தடுப்போம் எனக்கூறுகின்றனர்.


பெரிய வத்தலாபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் பன்னீர் செல்வம், துணை தலைவர் இளங்கோவன் மற்றும் செயலாளர் பி.கே  சாமிக்கண்ணு,  இந்த மொத்த பிரச்சனைளுக்கும் மிக முக்கிய காரணமாக இருப்பவர்கள் தருமபுரி மாவட்ட பால்வளத்துறையி்ன் துணை பதிவாளராக பணியாற்றி வரும் கோவிந்தசாமியும், சரக முதுநிலை ஆய்வாளராக பணியாற்றி வரும் கவின் ஆகியj இருவருமே காரணம் என குற்றச்சாட்டுகின்றனர்.


தருமபுரி மாவட்டத்தில் 245 க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களும், 33 பால் குளிருட்டும் நிலையங்களும் செயல் பட்டு வருவதாகவும், பால் வளத்தை பெருக்கி அரசுக்கு வருவாயை ஈட்டி தரவேண்டிய முக்கிய பொறுப்பிலுள்ள பால்வளத்துறையின் துணை பதிவாளர் கோவிந்தசாமி மற்றும் சரக முதுநிலை ஆய்வாளர் கவின், ஆகிய இருவரின் செயல்பாடுகளால் நலிவடைந்து வருவதாகவும், பால்வளத்துறையில் நடக்கும் முறைகேடுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய இவர்கள், கையூட்டுகளை பெற்று கொண்டு முறைகேடுகள் எதையும் கண்டுகொள்வதில்லை இதனால் தருமபுரி மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு  பால் வழங்கி வரும் உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்களை நோக்கி  செல்வதால், தருமபுரி மாவட்ட பால்வளத்துறையே துணை பதிவாளர் கோவிந்தசாமி, கவின் ஆகிய இருவராலும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும், பால் வளத்தை மீட்டெடுக்க தருமபுரி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்து வருகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad