பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் குலதெய்வ திருவிழா மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம் இதையடுத்து இந்த ஆண்டு திருவிழாவானது நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவானது. அதிகாலை முதலே ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது.
இதையடுத்து பக்தர்கள் மாவிளக்கு, தீச்சட்டி, பால்குடம், எடுத்து தங்களது நேர்த்திகடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர். அதைதொடர்ந்து பக்தர்களுக்கு கிடா விருந்து வழங்கப்பட்டது. இவ்விழாவில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்ச்சிக்கான ஏற்பாடுகளை பேளாரஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ராதா மாரியப்பன் மற்றும் பங்கி குடும்ப பங்காளிகள் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக