தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான கவிதை, ஓவியம், பேச்சு, கிராமிய கலைக்குழுபோட்டி, மொபைல் போட்டோகிராபி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகளை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் DNV.S.செந்தில்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தார், கவிதை, ஓவியம், மொபைல் போட்டோகிராபி, கிராமிய கலைக்குழு போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் இரண்டு இடம் பெறும் தனிநபர் மற்றும் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற முதல் பரிசு பெற்றவர் உட்பட மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற தகுதியுடையவர்கள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது.
.gif)


