Type Here to Get Search Results !

அரூர் வட்டாரத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு.


அரூர் வேளாண்மை உழவர் நலத் துறை வேளாண்மை இணை இயக்குனர் திருமதி விஜயா அவர்கள் அரூர் வட்டாரத்தில்  இன்று ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் அரூர் வேளாண்மை விரிவாக்க மையம் வேளாண்மை கிடங்கில் விதைகள் இருப்பு பற்றி ஆய்வு மேற்கொண்டார்கள். 


மேலும் மோப்பிரிப்பட்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது விவசாயிகளிடம் கிரைன்ஸ் வலைதளத்தில் விவசாயிகள் அவர்களுடைய நில விவரங்கள் ஆதார் விவரங்களை பதிவேற்றம் செய்து வேளாண்மை துறையில் உள்ள மானியங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம் என்றும் கூறினார்கள்.  வேளாண்மை இணை இயக்குனர் அவர்கள் கொங்கவேம்பு பஞ்சாயத்து கருத்தம்பட்டி கிராமத்தில் சமையல் எண்னை மீதான தேசிய இயக்கம் 2022- 23 எண்னை மரவித்து பயிர் வேம்பு நடவு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டது.  

மேலும் இக்கூட்டத்தில் அரூர் வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி சரோஜா, வேளாண்மை அலுவலர் திரு குமார் மற்றும் திரு.மதன் (மாநில திட்டம்), துணை வேளாண்மை அலுவலர் திரு கோவிந்தராஜ் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் திரு சிவன் திரு ரமேஷ் திரு ஜெயக்குமார் திரு வினோத் குமார் திரு ரசூல் மற்றும் உதவி விதை அலுவலர் திரு மாரியப்பன் மற்றும் அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் திரு செந்தில்குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு திருப்பதி மற்றும் திரு.சந்திரன் உட்பட அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies