Type Here to Get Search Results !

வெள்ளிசந்தையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்சார வாகன பயன்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் பேரணி நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வெள்ளி சந்தையில் தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் மின்சார வாகனம் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு மற்றும் பேரணி தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் தலைமையில் நடைப்பெற்றது.



நிகழ்ச்சிக்கு வெள்ளி சந்தை துணை மின் நிலைய செயற்பொறியாளர் வனிதா முன்னிலை வகித்தார், இதில் பேசிய தர்மபுரி மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் பெருகி வரும் வாகன போக்குவரத்தால் நச்சுப் புகை வெளியேறி சுற்றுப்புறத்தை பாதிப்படைய செய்வதோடு மட்டுமல்லாமல் ஓசோன் படலத்தை பாதிப்படைய செய்கிறது.

இதனனால் பூமியின் வெப்பநிலை அதிகரிப்பதுடன் மழைப்பொழிவை பாதிக்கின்றது, மேலும் பல்வேறு உடல் நல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. இதனன தவிர்க்கும் பொருட்டு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் எந்தவித அச்சமுமின்றி மின்சார வாகனத்தை பயன்படுத்தி சுற்றுசூழலை பாதுகாக்க கேட்டுக் கொண்டார்.


அதனை தொடர்ந்து துணை மின் நிலையத்திலிருந்து வெள்ளி சந்தை 4 ரோடு பகுதி வரை விழிப்புணர்வு மின்சார வாகன பேரணி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின்பொறியாளர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies