தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் முதல்வராக பணியாற்றி வந்த அரசு, தொழில் நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த பச்சை, டிரைவர்கள் லிங்கமூர்த்தி, சுந்தரம், நடத்துனர்கள் சுந்தரம், அமனுல்லா ஆகியோர் பணி ஓய்வு பெற்றனர். இதையடுத்து, பாலக்கோடு பணிமனை அலுவலகத்தில், ஓய்வு பெற்றவர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா பாலக்கோடு அரசு போக்குவரத்து கழக கிளைமேலாளர் அழகரசன் தலைமையில் நடந்தது.
தொழிற் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், யுவராஜ் மற்றும் சக பணியாளர்கள், ஓய்வு பெற்றவர்களை பாராட்டினார்கள். கிளை மேலாளர் அழகரசன், ஓய்வு பெற்றவர்களுக்கு பணி கொடை வழங்கி பாராட்டினார்.
.gif)

