Type Here to Get Search Results !

அரூர் தொகுதிக்கு அடிப்படை வசதி வேண்டி கலெக்டரிடம் மனு கொடுத்த எம்எல்ஏ சம்பத்குமார்.


அரூர் தொகுதிக்கு உட்பட்ட  வேப்பம்பட்டி பஞ்சாயத்து மல்யுத்து பகுதியில் சிறுபாலம் அமைக்கவும், சித்தேரி மலை கிராம பஞ்சாயத்து  மலைவாழ் மக்களுக்கு பட்டா வீடு, ஆடு, மாடு, மின் இணைப்பு வழங்கவும், பட்டுகோணம்பட்டி, காளிப்பேட்டை பொதுமக்களுக்கு பட்டா வழங்கவும்,  மத்தியம்பட்டி பஞ்சாயத்தில் வசிக்கும்  இருளர் இன மக்களுக்கு மயான கூடம், மயான பாதை அமைப்பது தொடர்பாக அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் இடம் பொதுமக்கள் கொடுத்த மனுக்களை மாவட்ட கலெக்டர் சாந்தியிடம் அண்மையில் வழங்கினார்.


இதுகுறித்து எம்எல்ஏ சம்பத்குமார் கூறுகையில் 2019 சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்ட போது அவரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிச்சாமி நீண்ட நாள் கோரிக்கையான அரூர் தொகுதி முக்கிய நீர் பிரச்சினை  குமரன் அணைக்கட்டு, சென்னாக்கள், கே. ஈச்சம்பாடி அணைக்கட்டு திட்டங்கள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.


நான் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்று முதல் கன்னிப் பேச்சியில் அரூர் தொகுதி  மாம்பட்டி குமரன், கே.ஈச்சம்பாடி, அணைக்கட்டு, சென்னாக்கள் நீரேற்றம், கே.ஈச்சம்பாடி திட்டங்கள் குறித்து பேசினேன். பதில் அளித்த முதல்வர் பழனிச்சாமி குமரன் அணைக்கட்டு ரூ.4.48 ஒதுக்கீடும், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுக்கு  ரூ10 லட்சம் நிதியில் ஆய்வு  மேற்கொண்டு மறு அளவீடு செய்து கூடுதல் நிதியாக  ரூ.420 கோடி ஒதுக்கப்பட்டது.  சென்னாக்கள் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.


தொடர்ந்து 2021 இல் நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு மீண்டும் நான் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றுள்ளேன். தற்பொழுது குமரன் அணைக்கட்டு திட்டம் கிடப்பில் போடப்பட்டதாகவும், கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு திட்டம் செயல்பாட்டில் உள்ளதாகவும், சென்னாக்கள் நீரேற்றம்   திட்டம் ஆய்வில்  உள்ளதாகவும் திமுக தவறான தகவல் தெரிவித்து வருகின்றனர் என அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies