தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் தொட்டபடகாண்ட அள்ளியில் 5இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடம் அமைக்கும் பணிக்கு முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியசெயலாலர்கள் வக்கில்செந்தில், கோபால், மாவட்டஅறங்காவலர் குழு தலைவர் ரங்கநாதன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராசன், மாவட்ட கவுன்சிலர் கவிதா சரவணன், பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, கூட்டுறவு சங்க தலைவர்கள் புதுர் சுப்ரமணி, வீரமணி, சரவணன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் ராஜா, துணை செயலாளர் அசோக் மற்றும் அதிமுக கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
.gif)

