இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 29 ஏப்ரல், 2023

இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.


இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கோடை விடுமுறையில் கிராமங்களில் அறிவியல் கருத்துக்களை பரப்புவதற்காக எங்கும் அறிவியல் ஆகவும் கணிதம் என்பதற்கு ஏற்ப வானவில் மன்ற கருத்தாளர்கள் மூலம் பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிற்சி நடைபெற்றது.

பயிற்சியில் வானவில் மன்ற கருத்தாளர்கள் இளம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா? தந்திரமா? கணித புதிர்கள், கதை எழுதுதல் பாடல் பாடுதல், வரைபடம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டது.



இப்பயிற்சியின் கருத்தாளர்களாக வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் நவீனா, பவதாரணி பயிற்சி அளித்தார்கள். இப்பயிற்சியில் தமிழ்நாடு அறிவில் இயக்க மாவட்ட தலைவர் மா. பழனி கலந்து கொண்டு பயிற்சியை நன்முறையில் எடுத்துக் கொண்டு கிராமங்களில் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு எளிய அறிவியல் கருத்துக்களை கொண்டு சேர்க்க ஆர்வமுடன் செயல்பட வேண்டும் எனக்கேட்டுக் கொண்டார். பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர் மாதவன், தாமோதிரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad