பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், தர்மபுரி இயற்பியல், துறை சார்பாக "ஒரு நாள் சிறப்பு கருத்தரங்கம்" நடைபெற்றது நிகழ்வில் முனைவர் செல்வ பாண்டியன் பேராசிரியர் மற்றும் துறை தலைவர் துறை இயற்பியல் துறை அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்.
முனைவர் மோகனசுந்தரம் இயக்குனர் பொறுப்பு பெரியார் பல்கலைக்கழக மேற்படிப்பு ஆராய்ச்சி மையம் அவர்கள் தலைமை உரையாற்றி நிகழ்வை துவக்கி வைத்தார் சிறப்பு விருந்தினர் முனைவர் கல்யாணசுந்தரம், உதவி பேராசிரியர், இயற்பியல் துறை, பெரியார் பல்கலைக்கழகம் சேலம் அவர்கள் "சூரிய ஆற்றல் மற்றும் வடிவமைப்பு"என்ற தலைப்பில் மாணவர்களுக்கு சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.

முனைவர் பிரசாத், உதவி பேராசிரியர், பெரியார் பல்கலைக்க பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார் இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் கோபாலகிருஷ்ணன், மற்றும் நிவேதிதா மற்றும் இரண்டாம் ஆண்டு இயற்பியல் துறை மாணவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்கள் ஓவியா மற்றும் சிவரஞ்சனி தொகுத்து வழங்கினார்கள் நிகழ்வில் சுமார் 200 இயற்பியல் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

