தற்போது பொது மக்களிடையே அரிசி உணவு அதிகரித்து, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டதால், சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.

கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கும் துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச சிறுதானிய ஆண்டு 2023ஐ முன்னிட்டு இந்திய சிறுதானிய கூட்டமைப்பு, அகில இந்திய சிறுதானிய சகோதரிகள், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நடத்திய சிறுதானிய பொங்கல் திருவிழா தர்மபுரி எபிரான் நர்சிங் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரெங்கநாயகி மற்றும் கள பணியாளர்கள் ராணி, உமா. விஜியலட்சுமி மற்றும் தொண்டுநிறுவன பிரதிநிதிகள் சீட்ஸ் சரவணன், விஐபி சரளா செந்தில் குமார், ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில்ராஜா, விலங்குகள் நல ஆர்வலர் ராஜலிங்கம், எபிரோன் பயற்சி இயக்குநர் சைன் தாமஸ், காந்தி சேவாலயம் வாசகர் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
.gif)

