
அதனடிப்படையில், இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 436 மனுக்கள் வரப்பெற்றன.
அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து, வருவாய் துறையின் சார்பில் காரிமங்கலம் மற்றும் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட 23 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாகளையும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 95 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் முதுகு தண்டவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு படுக்கை வசதியுடன் கூடிய சிறப்பு சக்கர நாற்காலிகளும் மற்றும் காற்று படுக்கைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் இன்று வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திருமதி.வெ.தீபனாவிஸ்வேஸ்வரி, இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி. வி.கே.சாந்தி, பழங்குடியினர் நல மாவட்ட திட்ட அலுவலர் திரு.யு.ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.பொ.செண்பகவள்ளி, உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.