அதன் பேரில் ஆதார் அடையாள அட்டைதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதார் அட்டைகளை புதுப்பிக்க வேண்டும். அதுசமயம், கடந்த 8 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள அடையாள சான்று (POI-Proof of Identity ) மற்றும் முகவரி சான்று POA- (Proof OF Address) ஆகியவற்றை புதுப்பித்துக்கொள்ள

- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை,
- ஓட்டுநர் உரிமம்,
- பான் கார்டு,
- வங்கி கணக்கு புத்தகம்
இரண்டாவது கட்டமாக ஆதார் சிறப்பு முகாம் பின்வரும் கிராமங்களில் எதிர்வரும் 27.01.2023 வெள்ளி கிழமை முதல் தொடங்கப்பட உள்ளது.
தருமபுரி - சோகத்தூர் - 27.01.2023
பாலக்கோடு - எர்ரனஅள்ளி - 27.01.2023
காரிமங்கலம் - கும்பார அள்ளி - 27.01.2023
அரூர் - தொட்டம்பட்டி - 27.01.2023
மேற்படி சிறப்பு முகாமிற்கு வரும் பொதுமக்கள் ஆதார் புதுப்பித்திட தேவையான ஆவணங்களான
- வாக்காளர் அடையாள அட்டை
- குடும்ப அட்டை,
- ஓட்டுநர் உரிமம்,
- பான் கார்டு,
- வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புதுப்பித்தல் கட்டணம் ரூ.50.
தங்களின் ஆதார் அட்டைகளை புதுப்பித்து பயன்பெறுமாறு ஆகியவற்றுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி ஆப., அவர்கள் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.