இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் முன்னிலை வகித்தார். முகாமின் நோக்கவுரையினை மாவட்ட நேரு யுவ கேந்திராவின் இளைஞர் அலுவலர் பிரேம் சரத்குமார் வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன் வரவேற்றார். 50க்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் பயிற்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
முதல் நாள் பயிற்சியில் ரியல் பவுண்டேசன் இயக்குநர் செந்தில்ராஜா, எல்ப் தொண்டு நிறுவன இயக்குநர் கருணாமூர்த்தி, தருமபுரி அரசு கலைக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சமுதாயத்தினை மேம்படுத்துவதில் இளைஞர்கள் பங்கு, தன்னார்வ மற்றும் இளைஞர் மன்றங்களின் கடமைகள், உடல் நலம் காப்பதில் யோகா மற்றும் விளையாட்டின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரைகள் வழங்கினர்.
முதல் நாள் பயிற்சி துவக்க விழா நிகழ்ச்சியின் நிறைவில் நேரு யுவ கேந்திராவின் தேசிய இளைஞர் தொண்டர் அரிபிரசாந்த் நன்றி கூறினார்.
.gif)

