Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறுதானிய சமத்துவ பொங்கல்.


தருமபுரி மாவட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சிறுதானிய சமத்துவ பொங்கல் 14.1.2023 இன்று பாலக்கோடு காந்தி சேவாலய குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் நடைப்பெற்றது இதில் திரு செல்வராஜ் அவர்கள் வரவேற்பு உரையாற்றினார்  திரு.கமலகண்ணன் அவர்கள் வாழ்த்துறை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி R சிந்து கலந்து கொண்டு பல குழந்தைகளுக்கு புத்தாடைகள் உதவிகள் வழங்கினார், நிகழ்வின் தலமையேற்று மாண்புமிகு.திரு KP.அன்பழகன் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் கலந்துக்கொண்டு புகையில்லா போகி மற்றும் விளையாட்டு போட்டிகளில்  வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கி, நம் கலச்சாரம் பற்றியும்  சிறுதானிய முக்கியத்துவம் பற்றியும் சமத்துவ பொங்கல் வாழ்த்துறை  வழங்கினார்.


இந்நிகழ்வில் திரு.தாமஸ், திரு. சிவகுமார், திரு. ராஜலிங்கம், திரு.பூவேந்தரசு, திரு.துரைமணி, திரு.குமரேசன், திரு.முனுசாமி, திரு. வாசகர், திருமதி.லதா, திருமதி.சந்திரகலா, திருமதி ரங்கநாயகி, திருமதி. சரளா, மற்றும் திருமதி.காசிமணி த்வணி சார்பில் கலந்து கொண்டுனர்.


மேலும் பாலக்கோடு சர்க்கரை ஆலை தலைவர் திரு.நாகராஜன் முன்னால் தலைவர் திரு.ரங்கநாதன் பல தலைவர்கள் கலந்து கொண்டனர், முடிவில் நன்றியுரை J.ஆனந்தன் தலைவர் த்வணி  அவர்கள் நன்றி கூறினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies