Type Here to Get Search Results !

பொம்மிடியில் பாஜக பிரமுகர் கடை உட்பட மூன்று கடைகளில் திருட முயற்சி.


தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே ஒரே இரவில்  மூன்று கடைகளில் சட்டர்களை திறந்து திருட முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் இப்பகுதியில் பரப்பு ஏற்பட்டது.


பொம்மிடி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி, துருஞ்சிப்பட்டி பழைய சினிமா தியேட்டர் அருகில் கல்பனா ஏஜென்சி என்ற வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருபவர் களிறு கண்ணன் இவர் தர்மபுரி மாவட்ட பாஜகவில் எஸ் சி பட்டியல் அணி தலைவராக உள்ளார், இவர் நேற்று இரவு 9 மணி அளவில் இரண்டு கடைகளில் சட்டர்களை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார், அதேபோல அருகில் கார்த்திக் ஹோட்டல் இயங்கி வருகிறது, அதன் உரிமையாளர் கார்த்திக்கும் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார், மேலும்இதை அடுத்து தியேட்டர் அருகில் உள்ள பேக்கரி நடத்தி வருபவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.


இதை நோட்டமிட்ட திருடர்கள் நள்ளிரவில் மேற்கண்ட மூன்று கடைகளில் சட்டர்களையும் ஒரு பக்கமாக இரும்பு கம்பி மூலம் நெம்பி தூக்கி விட்டு உள்ளே சென்று திருட முயற்சித்துள்ளனர், பேக்கரியிலும், பாஜக பிரமுகர் வீட்டு உபயோகப் பொருள் கடையிலும், கல்லாப்பெட்டியில் பணம் எதுவும் இல்லாததால் வெறுங்கையோடு திரும்பிய திருடர்கள், கார்த்திக் ஓட்டலில் மட்டும் பணம் 15 ஆயிரம் இருந்ததாகவும் அவற்றை எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இன்று அதிகாலை கடையின் உரிமையாளர்கள் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் சட்டர்கள் தூக்கப்பட்டு கதவு நெம்பிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி உற்றனர், உடனடியாக பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து வந்த பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் திருட முயற்சிக்கப்பட்ட மூன்று கடைகளையும் ஆய்வு செய்து உள்ளே ஏதாகிலும் பொருட்கள் காணாமல் போய் உள்ளதா? பணம் திருடு போய் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


அப்போது ஹோட்டலின் உரிமையாளர் கார்த்திக் மட்டும் தனது கல்லாவில் 15 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும், அவை திருடு போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார், இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், செல்போன் பயன்பாடுகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், திருடர்களின் கைரேகை கண்டுபிடிப்பதற்காக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொம்மிடி பகுதியில் மீண்டும் திருடர்கள் திருட முயற்சித்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884