தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப, அவர்கள் இன்று (27.12.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
நல்லம்பள்ளி வட்டம், பொம்மசமுத்திரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.24,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் தனிநபர் உறிஞ்சி குழிகள், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1,30,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தனிநபர் குடிநீர் இணைப்புகள், இண்டூர் ஊராட்சியிலிருந்து நாகர்கூடல் ஊராட்சிக்கு செல்ல இணைப்பு சாலை மற்றும் பாலம் அமைக்கும் இடம் தேர்வு செய்யும் பணியினையும், பொது விநியோக கடை பார்வையிட்டு, பாலவாடி ஊராட்சியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1,52,000/- மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட தனிநபர் குடிநீர் இணைப்பு பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் ரூ.48,85,000/- மதிப்பீட்டிலும், ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாபெரும் மரக்கன்றுகள் நடும் பணியிணையும், பொதுப்பணித்துறை ஏரி முழு கொள்ளளவு எட்டியுள்ளதை பொதுப்பணித்துறை பொறியாளருடன் பார்வையிட்டார்கள்.

மேலும், பேடறஅள்ளி ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் PMAY வீடுகள், தளவாய் அள்ளி ஊராட்சியில் தேசிய கிராம சுய ஆட்சி (RGSA) திட்டத்தின் கீழ் ரூ.23.56 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியினையும், சோமனஅள்ளி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டம் மற்றும் 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.42,65,000/- மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி செயலக பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் ரூ.53,000/- மதிப்பிலான முருங்கை நாற்று பண்ணையும், ரூ.53,000/- மதிப்பிலான தோட்டக்கலை நாற்றுப்பண்ணை ஆகிய நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கி.சாந்தி இஆப., அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, நடைபெற்று வரும் பணிகளை தரமாகவும், குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த ஆய்வின் போது நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.எம்.ஷகிலா, திருமதி.உ.கௌரி, பொறியாளர் திருமதி.மாலதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.சண்முகசுந்தரம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
