Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி முகாம்.


தருமபுரி மாவட்டம், ஹெச் தொட்டம்பட்டியில்  உள்ள ஸ்ரீ விஜய்ய வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திறன் மேம்பாடு பயிற்சி முகாம், அந்தப் பள்ளியின் பொருலாளர் குமார் மற்றும் இயக்குநர் சென்னகிருஷ்ணன், சுப்ரமணி ஆகியோர் முன்னிலையில், முதல்வர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

இந்த முகாமில் கோவை ஆர்.வி.எஸ். கல்லூரியின் ஆங்கிலத்துறை உதவிப் பேராசிரியர் ம.பழனிசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது : திறன் மேம்பாடு என்பது திறமையை அல்லது ஆற்றலை மேம்படுத்திக் கொள்வது. தற்போதைய போட்டி நிறைந்த இந்தச் சூழ்நிலையில் திறன் மேம்பாடு என்பது அவசியமான ஒன்று. ஒவ்வொருவரும் தான் தேர்ந்தெடுத்த துறையில் சாதனை புரிய தங்களது திறன்களை மேம்படுத்திக்கொள்வது அவசியம்.


பள்ளி மாணவர்கள் கல்லூரிக்குச் செல்ல வேண்டுமென்றால் அதுகுறித்த அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து வேலைக்குச் சென்றால் அதற்கான பயிற்சிகளை எடுத்துக்கொண்டு தன்னை திறன்மிக்கவராக மாற்றிக் கொள்வதே வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழி. நவீன தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், அறிவியல் வளர்ச்சி, மக்கள்தொகை, அதிகரிக்கும் போட்டி என பல காரணிகள் நம் திறனை வளர்த்துக் கொள்ள தூண்டுகின்றன. திறன் மேம்பாட்டினால் வேலையின்மை குறையும். வாழ்க்கைத் தரம் மேம்படும். தலைமைப் பண்பு வளரும். அதிகாரத்துவம் கிடைக்கும். சிக்கலுக்குத் தீர்வு காணும் அனுபவம் பெற முடியும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அறிவாற்றல், படைப்பாற்றல், தொழில்நுட்ப அறிவு, டிஜிட்டல் அறிவு, தனிப்பட்ட திறன்கள், முன்னோக்கு சிந்தனை, போன்ற திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்பைப் பெறவும், வாழ்க்கைத் தரம் மேம்படவும் உதவும். உங்களுடைய துறை சார்ந்த மற்றும் தனிப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள் என கூறினார். இதில், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் முந்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884