Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு பேரூராட்சியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம் பேரூராட்சி நடவடிக்கை.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெரு, பஸ் நிலையம், எம்.ஜி.ரோடு, தக்காளிமண்டி வரை  நீண்டகாலமாக நெடுஞ்சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வணிக நிறுவனங்கள். நடை பாதை கடைகள் உள்ளிட்டவை  இயங்கி வந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

மேலும் சாக்கடை கால்வாய்கள் முழுவதும் காண்கிரிட்டால் மூடப்பட்டுள்ளதால் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய முடியாமல் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசியது. இதனால் ஆக்கிரமிப்புக்களை அகற்றகோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.


மாவட்ட ஆட்சியர் சாந்தி  உத்தரவில் பேரில்   பேரூராட்சி தலைவர் முரளி முன்னிலையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டன. இதில் துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முழுவதையும் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர். 


மேலும் இதற்கு மேல் சாலைகளை ஆக்கிரமித்து செயல்படும் வணிக நிறுவனங்கள், நடைபாதை கடைகள்  மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர். சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சாலையை விரிவு செய்துள்ளதால்  போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது, இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884