திருவண்ணாமலை மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருவிழா 02.12.2022 முதல் 06.12.2022 முடிய நடைபெற உள்ளது. அம்மாவட்ட கால்நடை சந்தைக்கு தருமபுரி மாவட்டத்திலிருந்து கால்நடை வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை ஏற்றிசெல்லும்போது சம்மந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் அதற்குரிய உடல் நலச்சான்றினை பெற்றுச்செல்லவேண்டும்.
கால்நடை உதவி மருத்துவரின் சான்றில்லாத கால்நடைகளை திருவண்ணாமலை மாவட்டத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படும். என மாவட்டஆட்சித்தலைவர் திருமதி.கி. சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக