Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர் கூட்டம்.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற வரவு செலவு கணக்குகளை அதிகாரிகள் எடுத்துரைத்தனர் . இந்த கூட்டத்தில் மருத்துவத் துறை சார்பில்  மழைக்காலங்களில் பரவும் வைரஸ் நோய் தாக்கம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் தொற்று அறிகுறி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகி  மருத்துவர்கள் கூறும் ஆலோசனைகளை ஏற்று சிகிச்சை எடுத்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.


மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் சேதமடைந்த பைப் லைன்களை சரி செய்து முறையான குடிநீர் வழங்குதல், நீர்நிலை கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தால் முறையாக அகற்றம், ஊராட்சியில் பழுதடைந்த கட்டிடம் இருந்தால் உடனடியாக சீரமைத்தல், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் இதுவரை சேர்க்காத விடுபட்ட தகுதியான பயனாளிகளை  உடனடியாக இணைக்க உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு சேர்மன் பாஞ்சாலை  கோபால், துணைச் சேர்மன் பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ரவி மற்றும் ஒன்றிய  கவுன்சிலர்கள்  கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884