இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப்பபுறத்தில் ரூ.98,000/- க்குள் மற்றும் நகர்ப்புறத்தில் ரூ.1,20,000/- க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 இலட்சம் வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4% ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றம் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.

