Type Here to Get Search Results !

தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறை சார்பில் ஒரு நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.

தர்மபுரி அரசு கலைக் கல்லூரி ஆங்கிலத்துறை சார்பில் முதுகலை ஆங்கிலத் துறையின் சார்பாக "மொழி இலக்கியம் மற்றும் மொழியியல் ஆகியவற்றின் சமூக உணர்வு" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு அக்டோபர் 19 அன்று நடைபெற்றது இத்தருத்தரங்கில் முனைவர்.தேன்மொழி துணைத் தலைவர் ஆங்கிலத்துறை அரசு கலைக்கல்லூரி தர்மபுரி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். முனைவர். குமார் உதவி பேராசிரியர் ஆங்கிலத்துறை அவர்கள் அரசு கலைக் கல்லூரி சிறப்பு அழைப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் கிள்ளிவளவன் அவர்கள் தலைமை உரையாற்றினார் மேலும் முனைவர் பாக்கியம்மணி கணினி அறிவியல் துறை மற்றும் பேராசிரியர் ராஜேந்திரன் துறைத்தலைவர் கூட்டுறவுத்துறை அவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள் தேசிய அளவிலான கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக முனைவர் டீ கங்காதரன் இணை பேராசிரியர் அரசு கலைக்கல்லூரி சேலம் அவர்களும் முனைவர் மனு மங்காட்டு பேராசிரியர் கவிஞர் மொழி பெயர்ப்பாளர் ஐதராபாத் அவர்களும் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு இக்கருத்தரங்கு தலைப்பில் மிகவும் அழகாக விரிவுரை ஆற்றினர்.

மேலும் இக்கருத்தரங்கில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுடைய ஆய்வு கட்டுரைகளை கருத்தரங்கில் சமர்ப்பித்தனர் ரவிச்சந்திரன் கௌரவ விரிவுரையாளர் ஆங்கிலத்துறை அவர்கள் நன்றியுரை ஆற்றினார் மேலும் இக்கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்கள் ஆய்வு மலரை வெளியிட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884