தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த தண்டுகாரண அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது .28) ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தார். தீபாவளிக்கு சொந்த ஊருக்கு வந்த தமிழ்ச்செல்வன் தினமும் சாப்பிடாமல் குடிபோதையிலேயே இருந்துள்ளார்.
நேற்று வீட்டிலிருந்து வெளியே செல்ல படிக்கட்டில் இறங்கியவர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார், தலையல் காயம் ஏற்பட்டதால் சுயநினைவு இழந்துள்ளார். உடனடியாக அவரை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர், மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்த தமிழ்செல்வனுக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகனும் இருப்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக