இம்முகாமில் 18 முதல் 20 வயதிற்க்குள் உள்ள 12ம் வகுப்பு படித்த (2020, 2021, 2022) ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற பெண் வேலைநாடுநர்களை மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இம்முகாமில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.16,550/- வழங்கப்படும். மேலும், தங்கும் வசதி (விடுதி) இலவசமாக அளிக்கப்படும்.
மனுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ் 12ம் வகுப்பு, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் முகாமில் கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
இதன் மூலம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார் துறையில் வேலைக்கு சென்றால் தங்களது பதிவு ரத்து செய்யப்பட்டு விடுமோ என்று அச்சப்பட வேண்டியதில்லை.
ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள பெண் மனுதாரர்கள் அனைவரும் வருகின்ற 15.10.2022 அன்று (சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது, என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி இஆப., அவர்கள் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.


