பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அணையின் உபரி நீரை கடகத்தூர், சோகத்தூர் பகுதிகளில் உள்ள ஏரிகளில் முழுமையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பச்சனம்பட்டி கூட்டு ரோடு அருகே நேற்று முன்தினம் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்,
இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது, மேலும் போராட்டக்காரர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்நிலையில் முன் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக அப்பகுதியை சேர்ந்த 30 பெண்கள் உள்பட 150 பேர் மீது தர்மபுரி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


