கோயம்புத்தூர் ஜெம் மருத்துவமனையில் தருமபுரியை சேர்ந்த திரு.வெங்கடேசன் என்பவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. இதற்கு முப்பது அழகுக்கு மேல் ஓ பாசிடிவ் ரத்தம் தேவைப்படுகிறது. இதை அறிந்த ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஐந்து நபர்கள் இன்று தருமபுரி மாருதி இரத்த வங்கியில் ஓ பாசிட்டிவ் ரத்தம் கொடையளித்தனர்.
கல்வி போதனையுடன் சமூகப் பணிகளையும், உயிர்காக்கும் இரத்த தானத்தையும் முன்னெடுத்தி கொண்டு செல்லும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை மாருதி ரத்தம் வங்கி நிர்வாக அறங்காவலர் திரு.வெங்கடாச்சலம் அவர்கள் மிகவும் பாராட்டினார்.
இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் Dr. சா. எழிலன், துணை முதல்வர் Dr. சி. தமிழரசு, நிர்வாக அலுவலர், Er. ரா.கணேஷ் , நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் திரு. இரா. சதீஸ் குமார், திரு.பா.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
