Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியர் சதிஷ்குமார் பணியிடை நீக்கம் - தர்மபுரியில் சுகாதார அமைச்சர் பேட்டி.

தர்மபுரி அரசு மருத்துவமனை கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவிகள் மற்றும் மணவார்கள் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மருத்துவக் கல்லூரி முதல்வர் டீன் அமுதவல்லியிடம் சென்று பேராசிரியர் சதீஷ் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக புகார் மனு ஒன்றை அளிக்கிறார். 

இந்த புகாரினை உடனடியாக விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார் தருமபுரி மாவட்ட மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி, பெறுத்திருந்த இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேராசிரியர் சதீஷ்குமார் மாணவிகளிடம் எல்லை மீறி தவறான நோக்கத்தோடு நடந்து கொள்வதால், நாங்கள் அனைவரும் அவரின் வகுப்புகளை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்தனர், உடனடியாக இந்த மாதம் 3மருத்துவ பேராசிரியர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார் மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி. 

விசாரணை முழுமையாக செய்த 3பேர் கொண்ட மருத்துவர் குழுவிற்கு சில அரசியல் அழுத்தத்தால் மாணவ மாணவிகள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை பதிவு செய்யாமல் ஏற்கனவே பூர்த்திசெய்யப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட்டு செல்லும்படி மிரட்டியுள்ளனர். இதற்கு மாணவர்கள், நாங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் ஒன்று கூட இந்த படிவத்தில் இல்லை, எனவே நாங்கள் எப்படி கையெழுத்து போடமுடியும் என்று எதிர்ப்பு தெரிவித்து விசாரணை குழுவை விட்டு  மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

இது குறித்த புகார்கள் மருத்துவ  மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களின் கவனத்திற்கு சென்றதால் அமைச்சர் அவர்கள் உடனடியாக தருமபுரி மருத்துவ கல்லூரி டீன் அமுதவள்ளியிடம், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சதீஸ்குமாரை பணி இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884