Type Here to Get Search Results !

சாலையோர குழிகளை மூடி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த முதியவர்.

பாலக்கோடு பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் மத்திய அரசின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கும் திட்டமான ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 5 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த கடந்த மாதங்களுக்கு முன்பு குழாய்கள் பதிக்கப்பட்டது.

அவ்வாறு தோண்டப்பட்ட குழி சில இடங்களில் மூடப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது, இந்த குழிகளில் விழுந்து பலர் இருசக்கர வாகனத்தில் வந்து விபத்தில் சிக்கியதும், இதில் ஒருவர் உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக பேருந்து நிலையம் பகுதிகளில் முதியவர் ஒருவர்  தோண்டப்பட்ட குழிகளை மண் மற்றும் கற்களை கொண்டு மூடி வருகிறார், இது  இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது, அதே போல் முதியவரின் சமூகப்பணியை பலர் பாராட்டி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies