தருமபுரியை அடுத்த அன்னசாகரம் ஏரியில் இருந்து விவசாயிகளுக்கு விவசாயப்பணிகளுக்கு களிமண் எடுக்க அரசு அனுமதி அளித்திருந்தது. எனவே அப்பகுதி விவசாயிகள் சிலர் அன்னசாகரம் ஏரியிலிருந்து களிமண்ணை எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தினர் வருகின்றனர், இந்நிலையில் சிலர் அரசின் முறையான அனுமதி இல்லாமல் ஏரியில் உள்ள கிராவல் எனப்படும் நொரம்பு மண்ணை அள்ளி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது, இன்று அனுமதியின்றி ஏரியில் கிராவல் மண் அள்ளுவதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் 3 லாரிகளை சிறைபிடித்து கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை கிராம நிர்வாக அலுவலர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிகோன்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதற்குள் அந்த 3 லாரிகளையும் சம்பந்தப்பட்டவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


