தருமபுரிமாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பிக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று 12.8.2022 வெள்ளிக்கிழமை நாட்டின் 75_ஆவது சுதந்திர தின அமுத பெருவிழாவை முன்னிட்டு பள்ளியில் பயிலும் 120 மாணவர்களுக்கும் வீடுகளில் தேசியக்கொடியேற்ற வழங்கப்பட்டது.
தேசியக்கொடியின் சிறப்பு அதைபயன்படுத்தும் முறைகளை வழங்கி 75வது சுதந்திரநாள்விழா துவக்கிவைக்கப்பட்டது, விழாவிற்கு தலைமை ஆசிரியர் திரு.ப.சரவணன் அவர்கள் தலைமையில் தலைமைதாங்கினார்.
அனைவருக்கும் தேசிய கொடிகளை ஆசிரியர் திரு.கோ.தாமோதரன் வழங்கினார், விழாவில் பள்ளி ஆசிரியர்கள் திரு. இ.ஜவஹர், திருமதி.டி.ஜான்மா, திரு.மா.சுரேஷ், திரு.இரா.ரமேஷ், பள்ளி மேலாண்மைக் குழு தலைவி திருமதி.புஷ்பராணி, சத்துணவுப் பணியாளர்கள் திருமதி.சின்னபாப்பா, திருமதி.ஜெமினி மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


