தற்போது தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள் பயனடையும் வகையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் TNUSRB 2022 இரண்டாம் நிலை காவலர் ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான போட்டித்தேர்வு-2022, 3552 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான இலவச பயிற்சி வகுப்பு 27.07.2022 அன்று தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. இத்தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் http://surl.li/ckvqc என்ற Google படிவத்தில் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04342 296188 வாயிலாக தொடர்பு கொள்ளலாம். TNUSRB 2022 உள்ளவர்கள் போட்டித் தேர்விற்கு தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

