ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக மாவட்ட நிர்வாகம் 18 வது நாளாக தடை நீடித்து வருகிறது இந்த நிலையில் ஆடி அமாவாசையான இன்று ஒகேனக்கல் காவேரி ஆற்றில் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க வாகனங்கள் மூலமாக வரும் பொதுமக்களை மடம் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதனால் தர்மபுரி மாவட்டத்திலுள்ள உள்ளூர் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தடையை மீறி பேருந்து மூலமாக ஒகேனக்கல் முதலைப்பண்ணை நாகர்கோயில் பகுதியில் காவிரி கரையில் ஏராளமான பொதுமக்கள் வாழை இலை,பச்சரிசி , தேங்காய், பழம், உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றில் விட்டனர்.
பின்னர் அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மனை வழிபட்டனர்.
.
.gif)

