இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

சனி, 9 ஜூலை, 2022

இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது.


தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த இலளிகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள்  படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று  2022 - 2024ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை  கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்   பள்ளியில் பயின்று வரும் மாணவ  மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் உறுப்பினர்கள் பெற்றோர்கள் மூலம் மொத்தம் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக திருமதி. M.  பரிமளா மாதேஸ்குமார், துணைத் தலைவராக திருமதி. S. பொன்னரசி ஆகியோரையும் மேலும் மற்ற குழு உறுப்பினர்களையும் பெற்றோர்கள் ஒரு மனதாக தேர்ந்தெடுத்தனர். 

இந்த குழு பள்ளி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் தரமான கல்வியை உறுதி செய்திடவும், அரசு பள்ளிகளை மேம்படுத்தவும்  செயல் பட  உள்ளது. 

இந்த கூட்டத்தில் பள்ளியின் தலைமையாசிரியர்   திரு V. இராஜசேகர்  , இருபால் ஆசிரியர்கள், மாவட்ட கருத்தாளராக திரு. M.ஜெயராமன் த. ஆ, ஊ. ஒ. தொ. பள்ளி, மானியத அள்ளி,  மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

நமது தகடூர் குரல் தளத்தில் உங்கள் விளம்பரங்களை குறைந்த செலவில் விளம்பரம் செய்து பயனடையுங்கள், தொடர்புக்கு: 9843 663 662 / 95 66 53 73 91.