இந்த இரட்டை கொலை வழக்கில் தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து அவர்கள் சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்தும், செல் போன் சிக்னல்களை வைத்தும், கொலையானவர்களின் அருகில் கிடைத்த ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணை அடிப்படையில் இந்த வழக்கு தொடர்பாக ஈரோட்டை சேர்ந்த ரகு, சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜோசப், சுரேன்பாபு, விஸ்னுவர்மன் ஆகிய 4 பேரும் நேற்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை உரிமையியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
தருமபுரி மாவட்ட காவல் துறையினர் இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் தருமபுரி அழைத்துவந்து 6 பேரையும் தருமபுரி 2வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த இரட்டை கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதால் விரைவில் அவர்களும் கைது செய்யபடுவார்கள் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.


