மேலும் பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் காளியம்மன் தேர் திருவிழாவில் நேற்று தேர் நிலைதடுமாறி சாய்ந்து உள்ளதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் நடந்த சம்பவத்தை அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியபோது
தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நேரில் சென்று நீதி வழங்கி ஆறுதல் கூறும் வகையில் உத்தரவிட்டதை அடுத்து தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை செய்து பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கி ஆறுதல் கூறினோம் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கும்படி மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அறிவுறுத்தியுள்ளோம் மேலும் கடந்த 8ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுப்படி தேரிழுக்க உத்தரவு பிறப்பித்தை அடுத்து திருவிழா நடைபெற்றது எதிர்பாராதவிதமாக துயரச் சம்பவம் நடைபெற்றுள்ளது இது சம்பந்தமாக காவல்துறைக்கு உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது மேலும் திருவிழாக்காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆய்வு செய்து உறுதிப்படுத்திய பின்னரே விழாக்களை நடத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்ப சேகரன் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில் குமார் தர்மபுரி நகர செயலாளர் அன்பழகன் நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

