தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., அவர்கள் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பங்குநத்தம், பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த திரு.கோவிந்தராஜின் மகன் திரு.சின்னசாமி அவர்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டமைக்காக சென்னை, தமிழ்நாடு சுகாதார அமைப்புகளின் திட்ட இயக்குநரிடமிருந்து வரப்பெற்ற ரூ.4,00,000/-த்திற்கான காசோலையினை திரு. கோ. சின்னசாமி அவர்களுக்கு இன்று (17.05.2022) வழங்கினார்கள்.