Type Here to Get Search Results !

பாலக்கோடு பஸ் நிலையத்தில் கடைகள் ஆக்கிரமிப்பால் பயணிகள் பள்ளி, கல்லூரி மாணவிகள் நிற்க இடமின்றி தவிக்கும் அவலம்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கனக்கான  பயனிகள், பள்ளி, கல்லூரி மாணவிகள் வந்து செல்கின்றனர், பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள கடைக்காரர்கள் நடை பாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளதால் பயணிகள் நிற்க இடமின்றி தவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் பள்ளி, கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவல்துறையினர் நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்ற அவ்வப்போது நடவடிக்கை எடுப்பதும் மீண்டும் ஆக்கிரமிப்பதும் தொடர் கதையாகி உள்ளது, இதனால் பள்ளி கல்லூரி மாணவிகளை பாதுகாக்க பாலக்கோடு காவல்துறையினர் தினமும் காலை மாலை வேளைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக் விடுத்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies