Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

பாலக்கோடு நகரில் பொழுதுபோக்கு பூங்கா - இடத்தை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி நகர பகுதியில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நகரத்தை சுற்றியும் அரசு பள்ளி கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகள் இயங்கி வருகிறது. நாளடைவில் வளர்ச்சி அடைந்து வரும் பேரூராட்சியில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக எந்த ஒரு இடமும் இல்லாததாலும் இளைஞர்கள் பெண்கள் முதியவர்கள் ஆகியோர் நகரத்தில் போதிய நடைப்பயிற்சி கூடங்கள் இல்லாததால் நெடுஞ்சாலை ஓரங்களில் காலை மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்து நடந்து கொண்டிக்கும் திட்ட பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதையடுத்து பொதுமக்களின் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் பாலக்கோடு நகரில் புதிய பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்படும் என்று தெரிவித்த நிலையில் பூங்கா இடத்தை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பூங்கா அமைய கூட இடம் மத்திய ரயில்வே துறைக்கு சொந்தமானது என்பதால் மத்திய அரசிடம் கடிதம் பெற்று உடனடியாக அப்பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மூலம் சிறியவர்கள் பெரியவர்கள் முதியவர்கள் இளைஞர்கள் என அனைவருக்கும் ஏற்றார்போல் நடைபயிற்சி மேற்கொள்ளவும் குழந்தைகள் விளையாட ஏதுவாக சிறு சிறு பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பேரூராட்சி தலைவர் பி கே முரளி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேரூராட்சிகள் உதவி இயக்குநர் குருராஜன், செயல் அலுவலர் டார்த்தி, கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies