இந்நிலையில் இந்த மயானத்தை பயன்படுத்தி வரும் மக்கள் போதிய இடவசதி இல்லாததால் அடக்கம் செய்த இடங்களிலேயே, மீண்டும் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்தும், தகனம் செய்தும் வருகின்றனர். மேலும் மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் நின்றாலோ, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலோ, இந்த மயானத்தில் உடலை அடக்கம் செய்ய முடிவதில்லை. சில நேரங்களில் தகனம் செய்வார்கள் உடல் ஆற்றில் அடித்துச் செல்லும் சூழலும் இருந்து வருகிறது.
இதனால் இந்த கிராம மக்கள் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என அனைத்து அலுவலர்களிடமும் மயானம் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என புகார் மனு கொடுத்துள்ளனர். இதனை அடுத்து நல்லம்பள்ளி வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்த்துறையினர் மயானம் உள்ள ஆற்று ஓடையை அளவீடு செய்துள்ளனர்.
அப்பொழுது 1 ஏக்கர் 48 செண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இப்போது 20 சென்ட் மட்டுமே இருப்பாத தெரிவித்துள்ளனர். தொடர்ந்து ஒரு மாதத்திற்குள் மீட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரையில் மயானத்திற்கு ஆக்கிரமிப்பு இடத்தைவிட்டு தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் மயான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர வேண்டும். மேலும் இந்த பகுதியில் தகன மேடை அமைத்து, போதிய சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

